Monday 23 December 2013

முதன் முதலாக காதல் டூயட் ....

நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து இந்த பாடலை சமீபத்தில் கேட்டேன். உற்சாகம் தரும் பாடலாக இருக்கிறது.. எனக்கு பிடித்த இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்..

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.
படம் - நிறம் மாறாத பூக்கள்
பாடியவர்கள் - எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1979

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
 உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..

ஜீனத்தமன் போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ... சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ.


13 comments:

  1. நல்லதொரு இனிமையான பாடலைப் பகிர்ந்துள்ளதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நல்ல பாடல்.இளையராஜாவும் ஜானகி அம்மாவும்,எஸ்.பி,பி யும் கைபிடித்தும் மனம் பிடித்துமாய் கூட்டிக்கொண்டு போவார்கள்.நன்றி வணக்கம்/

    ReplyDelete
  3. பிரமாதமான பாடல்

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!1!

    ReplyDelete
  5. அஹா எனக்கும் பிடித்த பாடல் . அருமையான இசை மற்றும் காட்சியமைப்பு :)

    ReplyDelete
  6. arumaiyana paadal varigal vaalthukal aya.

    ReplyDelete
  7. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..!! இதில் ஆண்டிப் பண்டாரம் பாடுவது போல் "எதிலார் சிற்பமாக என் எதிரிலாடி மறைந்திடுவார்..." என்ற வரிகளை காணவில்லையே நண்பரே...!!!

    ReplyDelete
  8. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..!! இதில் ஆண்டிப் பண்டாரம் பாடுவது போல் "எதிலார் சிற்பமாக என் எதிரிலாடி மறைந்திடுவார்..." என்ற வரிகளை காணவில்லையே நண்பரே...!!!

    ReplyDelete
  9. அருமையான பாடல் ...நன்றி..

    ReplyDelete
  10. அருமையான வரிகள். ஆனால் சீதா என் காதல் கோடி என்று கூறிவிட்டு ஆதாரம் நீயில்லாமல் என்னும்போது அவர் கொடியாகின்றார். கொடிக்குத்தான் படர்வதற்கு ஆதாரம் வேண்டும்.

    ReplyDelete